கொழும்பில் பாடசாலை மாணவி தற்கொலை!!

477

கொழும்பிலுள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 15 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவர் தற்கொலை செய்து உயிரிழந்துள்ளார்.

குறித்த மாணவி தனது வீட்டின் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று முன் தினம் இடம்பெற்றுள்ளது.

மாணவியின் மரண விசாரணை களுபோவில தெற்கு வைத்தியசாலையின் திடீர் மரண பரிசோதகர் பாரிந்த கொட்டுகொட முன்னால் இடம்பெற்றுள்ளது.

தற்கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.
கிருலப்பனை பொலிஸ் பரிசோதகர் உபுல் சமரசிங்கவின் ஆலோசனைக்கமைய அதிகாரிகள் குழுவொன்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது