அதிவேக வீதியில் விதிகளை மீறிய சுமார் 20,000 சாரதிகள் கைது!!

261

இவ் வருடத்தின் இதுவரையாக காலப் பகுதியில் அதிவேக வீதியில் விதிகளை மீறிய சுமார் 20,000 சாரதிகள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் நேற்று வரை தெற்கு அதிவேக வீதி மற்றும் கட்டுநாயக்க அதிவேக வீதிகளில், விதிகளை மீறிய 19,837 பேர் இவ்வாறு கைதாகியுள்ளனர்.

இதற்கமைய, அதிக வேகமாக வாகனத்தை செலுத்திய குற்றச்சாட்டிலேயே பெருமளவானோர் கைதாகியுள்ளதாக பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.