இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை : ஹரின் பெர்ணான்டோ!!

277

உலகின் பல நாடுகளுக்கு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. எனினும் இதனால் இலங்கையின் கணனி கட்டமைப்புக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படவில்லை. எனினும் இது குறித்து அவதானத்துடன் இருக்கின்றோம் என தொலை தொடர்பு மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று நடைபெற்ற ஊடவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.