யாழில் வாகன விபத்து : சம்பவ இடத்திலேயே மாணவர் ஒருவர் பலி!!

269

 
யாழில் இன்று தனியார் பேருந்துடன் மோதி பாடசாலை மாணவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து ஊர்காவற்றுறை, பாலக்காட்டுச் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது..

வேலணையில் இருந்து ஊர்காவற்றுறை நோக்கி இன்று காலை பயணித்த தனியார் பேருந்து, துவிச்சக்கர வண்டியில் சென்ற மாணவன் மீது மோதியதன் காரணமாகவே இந்த விபத்து ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

மெலிஞ்சிமுனையைச் சேர்ந்த ஜெயக்குமார் அகிலன் என்ற மாணவனே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் அப்பகுதி மக்கள் பேருந்து மீது கல்வீச்சு தாக்குதல் நடத்தியுள்ளனர்.

மேலும், உயிரிழந்த மாணவனின் சடலம் ஊர்காவற்றுறை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றதுடன், பேருந்து சாரதியையும் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.