குவைத் சென்ற இலங்கை பணிப்பெண்ணுக்கு நேர்ந்த அவலம்!!

209

குவைத் நாட்டிற்கு பணிப் பெண்ணாகச் சென்ற இலங்கை பெண் ஒருவர் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

குவைத் Oyoun பகுதியில், இலங்கை பணிப் பெண் நடந்துச் சென்ற போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் இலங்கைப் பணிப்பெண் அந்நாட்டு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.

“தான் Oyoun பகுதியில் உள்ள வீதியில் நடந்துச் சென்ற போது வெள்ளை நிற ஜீப் ரக வாகனத்தில் வருகை தந்த இருவர் தன்னை துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தினார்கள்.

பின்னர் வாகனத்தில் ஏறுமாறு கட்டாயப்படுத்தினார்கள். நான் மறுத்து விட்டேன். எனவே அவர்கள் வாகனத்தில் இருந்து கீழே இறங்கி தகாத முறையில் என்னிடம் நடந்துக் கொண்டார்கள்.

யாராவது உதவி செய்யுங்கள் என நான் உரத்து கத்திய போது அவர்கள் தப்பிச் சென்றனர்” என இலங்கைப் பணிப்பெண் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, சந்தேகநபர்களை கைது செய்வது தொடர்பில் அந்நாட்டு பொலிஸ் அதிகாரிகள் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர் என அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.