இத்தாலியை அடுத்து இலங்கையில் உருவாகும் அதிசயம்!!

237

இலங்கையில் முதன்முறையாக புதிய வகையிலான வீட்டுதொகுதி கட்டடம் நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

கொழும்பு நவம் மாவத்தையில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற Altair என்ற பெயரில் புதிய வகையிலான வீட்டுத்தொகுதி நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இதன் நிர்மாணிப்பு நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன.

Altair கட்டடம் – 240 மீற்றர் உயரத்திலான 68 மாடிகளை கொண்ட கட்டடமாக நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.

இத்தாலியிலுள்ள பீசா கோபுரம் போன்று இந்த கட்டடமும் சற்று சாய்ந்த வகையில் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே இதன் சிறப்பம்சமாகும். பீசா கோபுரம் உலக அதிசயங்களில் ஒன்றாக பிரகடனம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்த நிலையில் இலங்கையில் நிர்மாணிக்கப்படும் முதலாவது கட்டடம் இதுவாகும்.

இந்த வருட இறுதிக்கு முன்னர் இந்த கட்டடத்தின் அனைத்து நடவடிக்கைகளும் நிறைவு செய்வதற்கு அதன் நிறுவனம் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.