குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் : வீராத் கோலி!!

343

kholi

என்னை பொறுத்தவரை குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என இந்திய அணியின் வீராத் கோலி தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் சூதாட்டம் பற்றிய கருத்துக்கு சூதாட்ட வீரர்களால் இந்திய கிரிக்கெட்டின் நன்மதிப்புக்கு களங்கம் ஏற்பட்டு விட்டது.
இதில் சம்பந்தப்பட்ட சென்னை அல்லது ராஜஸ்தான் அணிகள் குறித்து கருத்து எதுவும் தெரிவிக்க விரும்பவில்லை.

அதேநேரம் சூதாட்டத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் எங்களின் தரத்தை பரிசோதித்து கொள்ள வரும் தென்ஆபிரிக்க தொடர் உதவும் என்பதால் இதை எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.

அத்துடன் நீண்ட இடைவெளிக்குப் பின் அவுஸ்திரேலியாவுடன் மோதவுள்ளோம். மைக்கல் கிளார்க் இல்லை என்றாலும் இந்த அணி எப்போதுமே வலுவான அணி தான். இதனால் எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம் நம்பிக்கையுடன் செயல்பட்டு இந்த பருவத்தை சிறப்பாக தொடங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் யுவராஜ் அணிக்கு திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும், சச்சினின் 200வது டெஸ்டை எதிர்பார்த்து காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.