சீரற்ற காலநிலை இன்னும் சில தினங்களுக்கு தொடருமென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அத்துடன் மழைவீழ்ச்சி அதிகரிக்கும்போது காற்றின் வேகம் மேலும் பன்மடங்கு அதிகரிக்கும் எனவும் அத்திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதன்பிரகாரம் மேல், மத்திய, வடமத்திய, வடமேல், சப்ரகமுவ, தென் மாகாணங்களில் அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்படுவதாவதுஇ நாடுபூராகவும் நேற்றைய தினம் பல பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய காலநிலை நிலவியது. குறிப்பாக பலத்த காற்றுடன் பல பகுதிகளில் மழைவீழ்ச்சி பதிவாகியமையினால் மக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர். காற்றினாலும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன.
எனினும் கொழும்பில் மட்டக்குளி போன்ற சில பகுதிகளில் காலை வேளை அதிகளவில் மழை வீழ்ச்சி பதிவானாலும் ஏனைய பகுதிகளில் சிறிய தூறல் மழை பெய்தமையை அவதானிக்க முடிந்தது.
மேலும் சில பகுதிகளில் இடைக்கிடையே மழை குறுக்கிட்டது. மேல், சப்ரகமுவ, வடமேல், தென், மத்திய மாகாணங்களில் மழை பெய்துள்ளது. அத்துடன் இன்றைய தினமும் 50 மில்லிமீற்றருக்கு அதிகமான மழைவீழ்ச்சி குறித்த பகுதிகளில் பதிவாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும் அதிகளவிலான காற்றும் இடி மின்னல் தாக்கமும் காணப்படும். அதேபோன்று கிழக்கு, ஊவா மாகாணங்களில் இன்று 2 மணிக்கு பின்னர் மழைவீழ்ச்சி பதிவாகும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.