முதியோர் இல்லத்தில் காதல் ஜோடியின் நெகிழ்ச்சியான செயற்பாடு!!

573

 
சமுதாயத்திற்கு முன் மாதிரியாகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தும் வகையிலான திருமணம் ஒன்று தம்புள்ளையில் நடைபெற்றுள்ளது.

முதியோர் இல்லத்தில் அங்கு வாழும் வயோதிபர்கள் முன்னிலையில் திருமணம் ஒன்று அண்மையில் நடைபெற்றுள்ளது.

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களை தமது உறவினர்களாக எண்ணிய, சானுக்க – பிரியதர்ஷனி தம்பதி தமது திருமணத்தை அங்கு நடத்தியுள்ளனர்.

நாமல்புர பிரதேசத்தை சேர்ந்த சானுக்க ரவிந்திர ரணசிங்க மற்றும் எல்.டீ.டீ.பிரியதர்ஷனி நீண்ட காலமாக காதலித்து திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.

இருவரின் திருமணத்தை இரு வீட்டாரும் தீர்மானித்த பின்னர், பிள்ளைகளால் கைவிடப்பட்ட நிலையில் முதியோர் இல்லத்தில் வாழும் முதியவர்கள் முன்னிலையில் திருமணத்தை நடத்த இருவரும் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய அவர்களின் திருமணத்தை நடத்துவதற்கு தம்புள்ளை முதியோர் இல்லத்தை தெரிவு செய்துள்ளனர்.

முதியோர் இல்லத்தின் வெளியரங்கில் தங்களின் திருமணத்திற்காக சம்பிரதாயங்களை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

முதியோர் இல்லத்திலுள்ள முதியவர்கள் மிகவும் விருப்பத்துடனும் நெகிழ்ச்சியுடனும் இந்த திருமணத்தை நடத்தி வைத்துள்ளனர்.

குறித்த தம்பதி அங்குள்ள முதியவர்களிடம் ஆசி பெற்று திருமண பந்தத்தில் இணைந்துள்ளனர்.