நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து மீண்டும் விவாதம் தொடங்கியுள்ள நிலையில் நடிகை கஸ்தூரி இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எட்டு வருடங்களுக்கு பின்னர் தனது ரசிகர்களை சந்தித்து அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டார்.
இந்த சந்திப்பின் போது, நான் அரசியலுக்கு வருவது ஆண்டவன் கையில் உள்ளது என பல வருடங்களாக கூறியது போலவே ரசிகர்கள் மத்தியில் மீண்டும் அவர் பேசினார்.
மேலும், போர் வரும் வரை பொறுமையாக காத்திருங்கள் எனவும் ரஜினி ரசிகர்களிடத்தில் கூறினார். இதையடுத்து ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. பலரும் இதுகுறித்து தங்கள் கருத்துக்களை கூறி வரும் நிலையில், பிரபல நடிகை கஸ்தூரி இது குறித்து டுவிட் செய்துள்ளார்.
அவர் கூறுகையில், நல்ல அரசியல், தலைவருக்கு எதிர்பாராத சூழ்நிலையில் கூட டக்கென முடிவெடுக்கும் திறன் வேண்டும். வருவேனா மாட்டேனா என்று வருடக்கணக்கில் யோசிப்பவர் ரஜினி என கூறியுள்ளார்
மேலும், ‘போர்’ அப்பிடின்னு கேட்டு, போரடிக்குது எனவும் அக்கப்போர் பண்ணாதீங்க எனவும் கஸ்தூரி கூறியுள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவேன் என தற்போது கூறுவது காலதாமதமான செயல் எனவும் கஸ்தூரி டுவிட் செய்துள்ளார்.






