புகையிரத மிதிபலகையில் பயணித்த பாடசாலை மாணவன் வைத்தியசாலையில் அனுமதி!!

285

 
புகையிரத மிதிபலகையில் பயணித்த பாடசாலை மாணவர் ஒருவர், பாதை ஓரமிருந்த தூணில் மோதுண்டு காயமடைந்துள்ளார்.

நாவலப்பிட்டியிலிருந்து கொட்டகலை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பயணித்த பாடசாலை மாணவரே இந்த விபத்தில் காயமடைந்துள்ளார். காயமடைந்த மாணவர் ,சிகிச்சைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வட்டவளை புகையிரத நிலையத்திற்கும் கலபட புகையிரத நிலையத்திற்கும் இடைப்பட்ட 99ஆவது மைல்கல் பகுதியிலே இன்று மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

க.பொ.த சாதாரண தர மாணவ,மாணவிகள் சிலர் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர் ஒருவரை பார்த்து விட்டு, புகையிரதத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்த போதே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

இதில் எஸ்.சதீஸ் என்ற 16 வயதுடைய மாணவனே காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.