இடிந்து விழுந்த வெள்ளவத்தை ஐந்து மாடி கட்டட உரிமையாளர் கைது!!

427

வெள்ளவத்தையில் இடிந்து விழுந்த ஐந்து மாடிக் கட்டடத்தின் உரிமையாளரை இந்த மாதம் 26ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட கட்டட உரிமையாளரை,இன்றைய தினம் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளவத்தை சவோய் திரையரங்கிற்கு அருகிலுள்ள ஐந்து மாடி கட்டடம் இடிந்து விழுந்ததில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

இந்த அனர்த்தம் காரணமாக இருவர் உயிரிழந்ததுடன் 21 பேர் காயமடைந்திருந்தனர். மேலும் ஒருவரை தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸில் சரணடைந்த நிலையில் கட்டட உரிமையாளர் நேற்றிரவு கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.