பிறந்து 15 நாட்களேயான குழந்தை மூச்சுத் திணறி பலி!!

233

தலவாக்கலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட வட்டகொடை, சவூத் மடக்கும்புர தோட்டத்தில் பிறந்து 15 நாட்களேயான பெண் குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

20 வயதான இளம் தாய் ஒருவர், பிரசவித்து 15 நாட்களேயான தனது குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துவிட்டு உறங்க வைத்து சென்றதாகவும், சில நிமிடங்களுக்குப் பின் குழந்தையை பார்த்த பொழுது குழந்தை உயிரிழந்திருந்ததாக தலவாக்கலை பொலிஸாருக்கு கொடுத்த வாக்குமூலத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து இன்று நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்த பின் குறித்த குழந்தையின் சடலத்தை பிரேதபரிசோதனை செய்வதற்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படும் என தலவாக்கலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.