பெண் பிள்ளைகளின் நன்மைக்காக நடுக்காட்டில் தனிமையாக வாழும் தாய்!!

236

 
காட்டில் தனிமையாக வாழும் தாய் ஒருவர் தொடர்பான தகவல் வெளியாகி உள்ளது. மூன்று பிள்ளைகளின் தாயான 64 வயதான பெண்ணொருவரே இவ்வாறு காட்டில் தனிமையாக வாழ்ந்து வருகிறார்.

தம்புள்ளை, வேகொடபொல, பலகொல்லயாய பிரதேசத்தின் காட்டுப்பகுதியில் குடில் அமைத்து அவர் வாழ்ந்து வருகின்றார்.

மூன்று மகள்களை பெற்ற அம்மையாரின் கணவர் இளம் வயதிலேயே அவரை கைவிட்டு சென்றுள்ளார். பல போராட்டமான துன்பங்களை அனுபவித்து பிள்ளைகளை படிக்க வைத்து சமூகத்தில் ஒரு சிறந்த இடத்திற்கு முன்னேற்றியுள்ளார்.

அவரது ஒரு மகள் பொறியியலாளர் ஒருவரை திருமணம் செய்துள்ளார். பிள்ளைகளின் வாழ்வில் தடை ஏற்படுத்த விரும்பாமையினால் ஏரி, குளங்களில் கிடைப்பதனை உணவாக உட்கொண்டு உயிர் வாழ்வதாக குறித்த தாய் தெரிவித்துள்ளார்.