வவுனியாவில் நடைபெற்ற வடமாகாண பெண்கள் சாரணிய பொதுக்கூட்டம்!!

916

 
வடமாகாண பெண் சாரணிய வருடாந்த பொதுக் கூட்டம் நேற்று (20.05​.2017​) சாரணிய வடமாகாண ஆணையாளர் திருமதி.நீ.தர்மகுலசிங்கம் தலைமையில் வவுனியா சைவப்பிரகாச மகளிர் மகாவித்தியாலயத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர் எம்.ராதாகிருஸ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு நினைவுப் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பெண்கள் சாராணிய சங்கத்தலைவி அனோஜா பெனாண்டோ, பெண்கள் சாரணிய பிரதம ஆணையாளர் யஸ்மின் ரகீம், பெண்கள் சாரணிய பிரதி ஆணையாளர் விசாக்கா திலகரட்ண மற்றும் சாரணிய மாணவர்களும் கலந்து சிறப்பித்திருந்தனர்.