வவுனியாவில் சிவில் பாதுகாப்பு உறுப்பினர்கள் மீது தாக்குதல்!!

607

வவுனியா தாலிக்குளம் பகுதியில் அண்மையில் இரு சிவில் பாதகாப்பு உறுப்பினர்கள் மீது இளைஞர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர். இத் தாக்குதலில் இருவரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தெர்டர்பாக மேலும் தெரியவருகையில்..

வவுனியா தாலிக்குளம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிமை இரு சிவில்பாதுகாப்பு உறுப்பினர்கள் அப்பகுதியிலுள்ள இளைஞர்களை தவறான முறையில் திருத்த மேற்கொண்ட முயற்சியின்போது இளைஞர்கள் திருப்பித்தாக்கியதில் அவர்கள் இருவரும் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து தாக்குதல் நடத்திய இளைஞர்களை பூவரசன்குளம் பொலிசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். நீதவான் குறித்த 9 இளைஞர்களை 14நாள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.



இளைஞர்களின் தாக்குதலையடுத்து குறித்த இரு சிவில் பாதுகாப்பு உறுப்பினர்களும் சிவில்பாதுகாப்பு உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக்கொண்டுள்ளனர்.