மதினா மக்தப் ஒருவருட பூர்த்தி விழா வவுனியா மதினா நகர் ஜிம்மா பள்ளிவாசலில் இன்று (21.05) மாலை 3.30 மணிக்கு மக்தப் எம்.ஆர்.பி. நசுறுதீன் தலைமையில் நடைபெற்றது.
‘மதினா மக்தப்’ என்ற இஸ்லாமிய மார்க்க கல்வியை நிறைவு செய்த மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றதுடன் அம் மாணவர்கள் தங்கள் திறமைகளை இந்நிகழ்வின் மூலம் வெளிக்கொணர்ந்திருந்தனர்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அல் கலீம் இர்சாட் உவைஸ் இனாமி மற்றும் கௌரவ அதிதியாக வடமாகாணத்திற்கான மக்கதப் ஒருங்கிணைப்பாளர் மௌலவி ஐ.எம். இமாம் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
இந்நிகழ்வில் மாணவர்களின் பெற்றோர் மற்றும் மதினா நகர் கிராமத்தினர் மற்றும் பள்ளிவாசல் உலமாக்கள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர்.















