வெள்ளவத்தை கட்டிட இடிபாடுகளுக்குள் பெண்ணின் சடலம் மீட்பு!!

575

சரிந்து வீழ்ந்த வெள்ளவத்தை கட்டிடத்தின் இடிபாடுகளுக்குள் இருந்து பெண்ணொருவரின் சடலம் நேற்று (21) மாலை மீட்கப்பட்டது. குறித்த பெண் மொரட்டுவ பிரதேசத்தைச் சேர்ந்த 60 வயதான பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் சம்பவத்தில் பலியானவர்களின் 3 ஆக அதிகரித்துள்ளது.

கடந்த 18 திகதி இடம்பெற்ற இந்த சம்பவத்தில் மேலும் 23 பேர் வரை காயமடைந்தனர். இதையடுத்து இடிபாடுகளுக்கு மத்தியில் தேடுதல் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டுள்ளன.