சென்னையில் 3 நாட்கள் சர்வதேச திரைப்பட விழா நடைபெறுகின்றது. இதில் அமெரிக்கா, ஒஸ்ரியா, அல்ஜீரியா, ஈரான், பிரான்ஸ், ஜெர்மனி, மலேசியா, குரோவேஷியா, பெல்ஜியம், லட்சியா நாடுகளை சேர்ந்த படங்கள் திரையிடப்படுகிறது.
மொத்தம் 16 படங்கள் திரையிடப்படுகிறது. குறும்படங்கள், ஆவணப் படங்களும் திரையிடப்படுகின்றன. தினமும் பகல் 12 மணிக்கும் மதியம் 3 மணிக்கும், மாலை 6 மணிக்கும் 3 காட்சிகளாக படங்கள் திரையிடப்படுகிறது.
16 படங்களும் ஆழ்வார்பேட்டையில் உள்ள சோவியத் கலாசார மையத்தில் திரையிடப்படுகிறது. 16 படங்களில் சிறந்த படம் சிறந்த இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.
செவன்த் சனல் கம்யூனிகேஷனும் தமிழ் திரைப்பட அகடமியும் இணைந்து இதை நடத்துகின்றன. சர்வதேச திரைப்பட விழா ஆரம்ப நிகழ்ச்சி சோவியத் கலாசார மையத்தில் இன்று நடந்தது. மாணிக்கம் நாராயணன் தலைமை தாங்கினார். இயக்குனர் வெற்றி மாறன் இதில் கலந்து கொண்டு திரைப்பட விழாவை தொடங்கி வைத்தார்.