பிலியந்தலை துப்பாக்கி சூட்டு சம்பவம் : பெண் ஒருவர் உட்பட மூவர் கைது!!

248

பிலியந்தலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் மூன்று பேர்கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துக்கு உதவி செய்தார்கள் என்றசந்தேகத்தின் பேரில் பெண் ஒருவரும், இரண்டு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிலியந்தலை நகரில் கடந்த 9ம் திகதி காவல்துறை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர்மீது இந்தத் துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது. இதன்போது காவல்துறை அதிகாரி ஒருவர் பலியானார்.

மேலும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் காயமடைந்திருந்த நிலையில் கொழும்புதேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமி அண்மையில்உயிரிழந்தார்.

இதேவேளை, உயிரிழந்த சிறுமியின் சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில்தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.