வெள்ளவத்தை கட்டட சரிவில் பலியான மலையக இளைஞனின் இறுதிக் கிரியைகள்!!

258

 
வெள்ளவத்தை பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் பலியான 20 வயது மலையக இளைஞரின் இறுதிக் கிரியைகள் இன்று நடைபெற்றது.

பத்தனை கிறேகிலி பகுதியைச் சேர்ந்த ராமர் நிரோஷன் என்ற இளைஞரே இந்த விபத்தில் பலியானார். இந்த நிலையில் குறித்த இளைஞரின் இறுதிக் கிரியைகள் அவரது சொந்த ஊரில் இன்றைய தினம் நடைபெற்றது.

கடந்த 19ஆம் திகதி இடம்பெற்ற இந்த விபத்தில் இது வரையில் 3 பேர் பலியானதுடன் 21 பேர் காயமடைந்த நிலையில் சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

முப்படையினரின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் சடலம் நேற்று வரையில் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் கட்டடத்தை நிர்மாணித்த கட்டட உரிமையாளர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.