வவுனியா மகாறம்பைக்குளத்தில் இன்று (22.05.2017) மதியம் 2.30 மணியளவில் கடையுடைத்து திருட்டுச் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருகையில்,
வவுனியா மகாறம்பைக்குளத்தில் அமைந்துள்ள வர்த்தக நிலையத்தினை இன்று (22.05.2017) மதியம் 2.30 மணியளவில் கடையின் பிற்பகுதியின் கதவினை உடைத்து சுமார் 24000 பெறுமதியான கமரா, 18,000 பெறுமதியான தொலைபேசி , மீள்நிரப்பு அட்டை என்பன களவாடப்பட்டுள்ளது.
மாலை வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் வர்த்தக நிலையத்தினை திறந்த போது வர்த்தக நிலையம் உடைத்து களவாடப்பட்டுள்ளதை அறிந்துள்ளார்.
இச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.






