ஏழாம் அறிவு, 3 ஆகிய படங்களுக்கு பின், ஸ்ருதி ஹாசனுக்கு, தமிழில் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. ஆனால் ஆந்திரா பக்கம் போன அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு கொடுத்தனர் தெலுங்கு இரசிகர்கள்.
இதனால் தமிழில் நடிப்பதை தவிர்த்தார். பின் பாலிவுட்டிலும், அவருக்கு கிராக்கி ஏற்பட்டது. இதனால், தமிழில் நடிக்க அழைத்தாலும் கால்ஷீட் காரணத்தை காட்டி, மறுத்து வந்தார்.
இப்போது ஒரு தெலுங்கு படத்திலும் மூன்று ஹிந்தி படங்களிலும் நடித்து வருகிறார். இந்நிலையில் பிரபல தமிழ் இயக்குனர் ஒருவர் தன்னிடம் வித்தியாசமான கதை இருப்பதாக கூறி அதில் நடிக்க முடியுமா என ஸ்ருதியை அணுகினாராம்.
கதை ரொம்பவே வித்தியாசமாக இருந்ததால் கண்டிப்பாக நடிக்கிறேன் என உறுதி அளித்து இயக்குனரை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினாராம் ஸ்ருதி. இந்தநிலையில் அவரின் அடுத்த ரவுண்டு குறித்த செய்தி கோடம்பாக்கத்தின் முன்னணி நடிகைகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.