வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த பேருந்து மீது கல் வீச்சுத் தாக்குதல்!!

223

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து மீது கல் வீச்சு தாக்குதல் இடம்பெற்றுள்ளது. இந்த தாக்குதல் சம்பவம் நேற்று (22.05) மதியம் 2.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த இ.போ.ச பேருந்து மீது வவுனியா ஈரப்பெரியகுளம் குருந்துபிட்டிய இராணுவ முகாமிற்கு அருகே மோட்டார் சைக்கிலில் வந்த இருவர் கல் வீச்சு தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பிச் சென்றுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் இ.போ.ச பேருந்தின் முன்பகுதியில் சிறிது சேதம் ஏற்பட்டதுடன் உயிர்ச்சேதங்கள் எவையும் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பேருந்தில் பயணித்த பயணிகளுக்கு மாற்று பேருந்து ஒழுங்கு செய்யப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் குறித்த பேருந்து வவுனியா இ.போ.ச சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இதேவேளை, சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஈரப்பெரியகுளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.