அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மீண்டும் மீளாய்வு!!

263

அரிசிக்கான கட்டுப்பாட்டு விலை தொடர்பில் மீண்டும் மீளாய்வு செய்யவுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சு தெரிவித்துள்ளது.

அரிசி தொடர்பில் சர்வதேச மற்றும் தேசிய மட்டத்தில் விசேட மதிப்பீடுகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சின் செயலாளர் சிந்தக லொகுஹெட்டி தெரிவித்தார்.

இதனூடாக பெற்றுக் கொள்ளப்படும் தகவல்களை அடிப்படையாக வைத்து அரிசிக்காக வழங்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு விலை தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.