89 வயதுப் பெண்ணை அதிவேக நெடுஞ்சாலையின் நுழைவாசலில் விட்டுச் சென்ற நபர்கள்!!

499

வெலி­கம, கப்­பு­வத்தை பிர­தே­சத்தைச் சேர்ந்­தவர் எனக் கூறப்படும். 89 வய­தான நான்கு பிள்­ளை­களின் தாய் ஒருவர் மாத்­தறை அதி­வேக நெடுஞ்­சா­லையின் நில்­வலா நுழை­வா­யிலில் அநா­த­ர­வாக விட்டுச் செல்­லப்­பட்டார்.

கடந்த 19 ஆம் திகதி மாலை கடும் மழை பெய்த போது இந்த வயோ­திபத் தாய் சுமார் 200 மீட்டர் தூரம் கொட­கம பண்­டா­ராம மாவத்தை வரை நடந்து வந்­துள்ளார்.

அப்­போது பிர­தே­ச­வா­சிகள் பொலிஸ் அவ­சர இலக்­க­மான 119 க்கு தொடர்பு கொண்டு தெரி­வித்­ததை அடுத்து மாத்­தறை பொலிஸார் அந்த இடத்­துக்கு வந்து இந்த வயோ­திபத் தாயை பொறுப்­பேற்று மாத்­தறை வைத்­தி­ய­சா­லையில் சேர்ந்­துள்­ளனர்.

தமக்கு நான்கு பிள்­ளைகள் இருப்­ப­தா­கவும் கடந்த 19 ஆம் திகதி தனது மகளும் மரு­ம­கனும் தன்னை வாக­ன­ மொன்றில் ஏற்றி நெடுஞ்­சா­லையில் அநா­த­ர­வாக விட்டுச் சென்றதாகவும் அத்தாய் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.