பழைய 500 ரூபாய் நோட்டில் மின்சாரம் தயாரித்து சாதனை படைத்த மாணவன்!!

1208

மத்திய அரசினால் செல்லாது என்று அறிவிக்கப்பட்ட பழைய 500 ரூபாய் நோட்டுக்களை வைத்து, மின்சாரம் தயாரித்து, ஒடிசா மாணவன் சாதனை படைத்துள்ளார்.

ஒடிசாவில், நுவாபடா மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் படிக்கும், லக்மண் துண்ட்(17) எனும் மாணவன் ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்தவர்.

இவர் கல்லூரி நேரத்திற்கு பின், மின்சார பல்பு விற்பனை செய்து வந்த நிலையில், தற்போது, பழைய, 500 ரூபாய் நோட்டில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்து அசத்தியுள்ளார்.

இது குறித்து லக்மண் கூறியதாவது, செல்லாத, 500 ரூபாய் நோட்டை பயன்படுத்தும் வழி குறித்த யோசனையில், ரூபாய் நோட்டை கிழித்தேன். அப்போது, அதில் இருந்த, சிலிக்கான் பிளேட்டை பார்த்ததும், மின் உற்பத்தி செய்வதற்கான திட்டம் தோன்றியது.

பின் மின்சாரத்தை சேமிப்பதற்காக, ஒரு டிரான்ஸ்பார்மரை உருவாக்கி, அதை சூரிய ஒளியில் வைத்து, மின்ஒயரால் டிரான்ஸ்பார்மருடன் இணைத்து, ஒரு, 500 ரூபாய் நோட்டில் இருந்து, 5 வோல்ட் மின்சாரம் உற்பத்தி செய்ய முடியும் என்பதை கண்டுபிடித்தேன்.

இந்த மின்சாரம் திட்டம், 15 நாட்களில் வெற்றியடைந்ததால், இத்திட்டம் குறித்து, மாநில அரசு மற்றும் மத்திய அரசிற்கு கடிதம் ஒன்றை எழுதினேன்.

என்னுடைய மின்சார கண்டுபிடிப்பினால் கவரப்பட்ட, பிரதமர் அலுவலகம் அந்த திட்டத்தை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும்படி, மாநில அரசுக்கு பரிந்துரைத்திருந்தது.

இது குறித்து கடந்த, 17 ஆம் திகதி மாநில மின் வாரிய அதிகாரிகள், மின் உற்பத்தி திட்டத்தை ஆய்வு செய்து, அளித்த அறிக்கையை பார்த்து நான் மிகவும் பெருமைக் கொள்கிறேன் என்று மாணவன் லக்மண் கூறியுள்ளார்.