மஹரகம பகுதியிலுள்ள பாடசாலை மாணவிகள் மற்றும் பெண்களை வீடியோ எடுத்த இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்தப் பகுதியிலுள்ள பெண்கள் பாடசாலைகளுக்கு முன்னால் நின்று தனது கையடக்க தொலைபேசியில் பாடசாலை மாணவிகள் மற்றும் வீதியில் பயணித்த பெண்களை வீடியோ எடுத்துள்ளார்.
மாணவிகளின் பெற்றோரினால் மஹரகம பொலிஸாரிடம் செய்த முறைப்பாட்டினை அடுத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான படையில் சேவை செய்யும் 28 வயதுடைய இராணுவ வீரர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் கைது செய்து அவரது தொலைபேசியை பரிசோதித்து போது, அதில் பெண்கள் மற்றும் பாடசாலை மாணவிகளின் பல வீடியோ பதிவுகள் கிடைத்துள்ளன.
அம்பலன்கொட பகுதியை சேர்ந்த குறித்த இராணுவ சிப்பாய், மஹரகம, தாப்பவத்த பிரதேசத்தில் திருமணம் செய்யாமல் பெண் ஒரு வருடம் வாழ்ந்து வருவதாக தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட நபர் இன்றைய தினம் நுகேகொட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.






