யாழ். புங்குடுதீவில் மகனின் புதிய மோட்டார் சைக்கிளால் தாயின் உயிர் பறிபோன சோகம்!!

486

யாழ்ப்பாணம் – புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் ஏழு பிள்ளைகளின் தாய் ஒருவர் விபத்தில் உயிரிழந்துள்ளார். தனது மகனின் மோட்டார் சைக்கிள் மூலம் ஏற்பட்ட விபத்திலேயே குறித்த தாய் உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

யாழ்ப்பாணத்தில் உறவினர் ஒருவரின் இறப்பு வீட்டுக்குச் செல்வதற்காக குறித்த தாய் காலை 8 மணியளவில் பேருந்துக்காக நின்று கொண்டிருந்தார்.

இதன்போது குறித்த தாய் நின்ற இடத்திற்கு முன்னால் உள்ள பாதை வழியே புதிய மோட்டார் சைக்கிளின் மகன் வந்துள்ளார்.

இதன்போது பாதையின் எதிரில் வந்த முச்சக்கர வண்டி மோட்டார் சைக்கிளுடன் மோதி அருகில் நின்றிருந்த தாய் மீதும் மோதியுள்ளது.

இந்த விபத்தில் படுகாயமடைந்த குறித்த தாய் உடனடியாக புங்குடுதீவு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

எனினும் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட போது, அவர் உயிரிழந்துவிட்டார் என்று மருத்துவ சோதனையில் உறுதிப்படுத்தப்பபட்டது என்று இறப்பு விசாரணைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்தில், புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த நாகேஸ்வரன் ரம்பை (வயது 51) என்ற 7 பிள்ளைகளின் தாயாரே உயிரிழந்துள்ளார்.

மேலும், உயிரிழந்த தாயின் மகனையும், முச்சக்கர வண்டி சாரதியையும் ஊர்காவற்துறை பொலிஸார், கைது செய்துள்ளனர்.