பொலித்தீனை உட்கொண்டு பரிதாபமாக உயிரிழந்த யானை!!

540

 
பொலன்னறுவை பகுதியில் இன்று காலை உயிரிழந்த நிலையில் யானையொன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களம் தெரிவித்துள்ளது.

30 வயது மதிக்கத்தக்க யானை ஒன்றே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் கூறியுள்ளனர்.

அகற்றப்படுவதற்காக சேமித்து வைக்கப்பட்டிருந்த பொலித்தீன் பைகளை உட்கொண்டமையாலேயே குறித்த யானை இறந்துள்ளது என அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, உயிரிழந்த யானையின் வயிற்றில் இருந்து 25 கிலோகிராம் பொலித்தீன் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, குப்பைக் கழிவுகள் ஒழுங்கான முறையில் அகற்றப்படாத காரணத்தால், பொலித்தீன் பைகளை உட்கொண்டு இது வரையில் 11 யானைகள் உயிரிழந்துள்ளதாக சுற்றுச்சூழல் வல்லுநர்கள் சுட்டிக்காடியுள்ளனர்.