இலங்கையின் நாகபாம்புப் பெண்ணுக்கு 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத சிறைத்தண்டனை, 100 ரூபா அபராதம்!!

583

nirosha_wimalaratne

நாகபாம்பு பெண்ணென்று அழைக்கப்படும் நிரோஷா விமலரத்ன என்ற பெண்ணுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட மூன்று மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நீதவானால் இந்த தண்டனை இன்று வியாழக்கிழமை வழங்கப்பட்டுள்ளது. குறித்த பெண் குற்றங்களை ஒப்புக்கொண்டதையடுத்து சிறைத்தண்டனைக்கு மேலதிகமாக 100 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.