மதப் பிரசாரத்தில் ஈடுபட்டவர்களை பிடித்து மரத்தில் கட்டி வைத்த கிராமவாசிகள்!!

516

la

அத்துருகிரிய கல்பொத்த பிரதேசத்தில் மத பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த குழுவொன்றை கிராம வாசிகள் சுற்றிவளைத்து அவர்களை மரத்தில் கட்டிவைத்த பின்னர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட குழுவில் பெண்ணொருவர் உட்பட மூன்று இருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் அத்துருகிரிய சதாசிபுர வீடமைப்புத் தொகுதியில் வசித்து வருபவர்கள் என தெரியவந்துள்ளது.

அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்குள் சென்று மத பிரசாரத்தில் ஈடுபட்ட இவர்கள் புத்த பகவானுக்கு அவமதிப்பை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்கள் உள்ளடக்கப்பட்டுள்ள துண்டுப்பிரசுரங்களை விநியோகித்துள்ளதுடன் தமது மதத்தில் இணைந்து கொள்ளுமாறு கேட்டுள்ளனர்.

நோய்கள் குணமாகும் எனவும் பணம் கிடைக்கும் எனவும் கூறியுள்ள இந்த நபர்கள் பௌத்த மதத்தை கைவிட்டு தமது மதத்தில் இணைந்து கொள்ளுமாறு வற்புறுத்தியுள்ளனர்.

இதனையடுத்து பிரதேசவாசிகள் இணைந்து அந்த குழுவினரை பிடித்து மரத்தில் கட்டிவைத்துள்ளனர். பின்னர் அருகில் உள்ள விகாரையின் பிக்கு ஒருவரை அழைத்து அவர்களை பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

கிறிஸ்தவ மதப் பிரிவொன்றை சேர்ந்த இந்த குழுவினர் இன்று கடுவலை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளதாக அத்துருகிரிய பொலிஸார் கூறினர்.