வவுனியாவில் யுத்தத்தில் தனது பார்வையை இழந்தவருக்கு கடையமைத்து கொடுத்த தமிழ்விருட்சம்!!

619

 
வவுனியா செட்டிக்குளம் வீரபுரத்தில் தனது இரு சகோதரர்களும் இறுதிகட்ட யுத்தத்தில் காணாமல் போயுள்ளதுடன் யுத்தத்தில் இவரது பார்வையும் இழந்து வருமையின் மத்தியில் வாழ்ந்து வரும் தனபாலனுக்கு

வவுனியா தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் கண்ணன் ஏற்ப்பாட்டில் லண்டன் துர்க்கை அம்மன் ஆலயத்தின் நிதி பங்களிப்பினால் நேற்று (24.05.2017) சுமார் நான்கு லட்சம் பெறுமதியான புதிய கடை அமைத்து பலசரக்கு பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டது.