மண்சரிந்து 3 பெண்கள் மரணம்!!

708

சப்புகஸ்கந்த, ஹெய்ந்தூவ பகுதியில் வீடு ஒன்றின் மீது மண் திட்டு சரிந்து வீழ்ந்ததன் காரணமாக இரண்டு பெண்கள் பலியாகினர்.

இதேவேளை, தெவினுவர பகுதியில் இடம்பெற்ற பிறிதொரு மண்சரிவு அனர்த்தத்தில் இன்னொரு பெண்ணும் உயிரிழந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுஏற்பட்டுள்ள காலி, களுத்துறை, மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் மீட்பு பயணிகளுக்காக படகுகள் மற்றும் உலங்கு வானூர்திகள் பயன்படுத்தப்பட்டுள்ளன.

இந்த பணிகளில் ராணுவமும், வான்படையும், கடற்படையினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தங்காலை, ரண்ன பகுதியிலும் – கதிர்காமம் பிரதான வீதி மற்றும் தங்காலை- திஸ்ஸமஹாராம – வீரகெட்டிய வீதிகளிலும் வெள்ளநீர் நிரம்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.