குவைத்தில் சித்திரவதைக்குள்ளான 120 இலங்கை பணிப்பெண்கள் நாடு திரும்பினர்!!

547

குவைத்திற்கு சென்று சித்திரவதைகளுக்குள்ளான இலங்கை பணிப்பெண்கள் 120 பேர் நேற்று முன்தினம் (24.05) நாடு திரும்பினர்.

இவர்களில் 52 பேர் நேற்று அதிகாலை நாட்டிற்கு வருகை தந்ததாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது. மீதமானோர் நேற்று பிற்பகல் தாயகம் திரும்பினர்.

குவைத்தில் பல்வேறு துன்புறுத்தல்களை எதிர்கொண்ட குறித்த பணிப்பெண்கள், குவைத் தூதரகத்தின் தடுப்பு முகாமில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

மேலும், 50 இலங்கை பணிப்பெண்கள் அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் குறிப்பிட்டது.

இதனைத் தவிர, குவைத் தொழில் அமைச்சின் கீழுள்ள தடுப்பு முகாமில் 91 இலங்கை பணிப்பெண்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரையும் நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்தது.