கொழும்பு – வெல்லம்பிட்டிய பிரதேசத்திலிருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றப்படுகின்றனர். தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக களனி கங்கையை அண்மித்துள்ள பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயம் காணப்படுகின்றது.
இதனால் அப்பகுதியிலிருந்து மக்களை உடனடியாக வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மக்கள் தமது உடமைகளுடன் அப்பகுதியிலிருந்து வெளியேறி வருவதுடன் பாதுகாப்பான இடங்களுக்கும் அனுப்பப்படுகின்றனர்.








