பதினான்கு வயதுச் சிறுவனுக்கு கூரிய ஊசியால் குத்திக் காயம் : பெண் கைது!!

216

பதினான்கு வயதுச் சிறுவன் ஒருவனின் கையில் கூரிய ஊசியால் குத்திக் காயப்படுத்திய பெண்ணொருவரை கண்டிப் பொலிசார் கைது செய்துள்ளனர்.

தெல்தெனிய பிரதேசத்தில் இருந்து கண்டி நோக்கி வந்து கொண்டிருந்த பஸ் ஒன்றில் நேற்று இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

குறித்த பஸ்ஸில் பயணித்த பெண்ணொருவர் பஸ்வண்டியில் தனக்கு அருகாமையில் நின்று கொண்டிருந்த சிறுவன் ஒருவனின் கையில் கூரிய ஊசியால் குத்திக் காயப்படுத்திவிட்டு பஸ்ஸிலிருந்து இறங்கித் தப்பியோட முயற்சித்துள்ளார்.

எனினும் பஸ்ஸில் இருந்த ஏனைய பயணிகள் அவரை மடக்கிப்பிடித்து கண்டி பொலிசில் ஒப்படைத்துள்ளனர்.

காயமடைந்த பையன் சிகிச்சைக்காக கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.