பிறந்த உடனே நடக்கப் பழகிய அதிசயக்குழந்தை!!

452

இந்திய தலைநகர் டெல்லியில், பிறந்து சிறிது நேரங்களே ஆன குழந்தை ஒன்று செவிலியரின் உதவியுடன் நடக்கப் பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றது.

பொதுவாக ஒரு குழந்தை பிறந்து சில மாதங்கள் கடந்த பின்னர்தான் தவழ ஆரம்பிக்கும். பின்பு கொஞ்ச நாட்களுக்கு பிறகு உட்காரத்தொடங்கி, பின்புதான் படிப்படியாக நடக்க ஆரம்பிக்கும்.

ஆனால் டெல்லியில் பிறந்த குழந்தை ஒன்று பிறந்து சில மணிநேரங்களிலேயே செவிலியரின் உதவியுடன் நடக்கப்பழகியுள்ளது.

செவிலியர் ஒருவர் தன்னுடைய கைகளில் குழந்தையை தாங்கி பிடிக்க, தன்னுடைய பிஞ்சு கால்களால் அக்குழந்தை நடக்க பழகும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக வருகின்றது.