வவுனியா பூந்தோட்டம் நகசிங்கர் ஆலயத்தில் நேற்று இரவு திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. நேற்று (28.05) இரவு ஆலயத்திற்குள் சென்ற திருடர்கள் அங்கிருந்த மூன்று உண்டியல்களை எடுத்து வெளியே கொண்டு சென்று அதிலிருந்த பெருமளவான பணத்தினை திருடிச் சென்றுள்ளதாக வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் ஆலயத்திற்கு பாதுகாப்பு கடமையிலிருந்த ஊழியரையும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குறித்த ஆலயத்தில் பல தடவைகள் உண்டியல் உடைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.







