மண் சரிவிலிருந்து வெளி வந்த பெண்ணின் சடலம் : துணியால் சுற்றப்பட்டமையால் சோகம்!!

208

கடந்த சில நாட்களாக பெய்த அடைமழை காரணமாக ஏற்பட்ட மண் சரிவில் சிக்கி உயிரிழந்த பெண்ணொருவின் சடலம் நேற்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாலிந்த நகரத்தின், கொஸ்குலன கெலின் என்ற மலை பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்த 68 வயதுடைய பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த மண் சரிவில் 7 பேர் உயிரிழந்தனர். எனினும் அவர்களின் சடலங்களை இதுவரையில் கண்டுபிடிக்க முடியவில்லை.

கண்டுபிடிக்கப்பட்ட இந்த பெண்ணின் சடலத்தை புதைப்பதற்கு ஒன்றுமே கிடைக்கவில்லை என குறிப்பிடப்படுகின்றது.

இதன் காரணமாக குறித்த சடலத்தை துணி ஒன்றில் சுற்றி பொலித்தின் பையில் வைத்து புதைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கடும் வருத்தத்தை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை பாலிந்த நகரில் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் எந்தவொரு அரசாங்க அதிகாரியும் கவனம் செலுத்தவில்லை பிரதேச மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.