வவுனியா தொழிநுட்பக் கல்லூரியில் குறுங்கால கற்கை நெறிகள் ஜூலை மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளன. அதற்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதாக வவுனியா தொழிநுட்ப கல்லூரியின் அதிபர் இன்று உத்தியோகபூர்வமாக தெரிவித்தார்.
ஏசி மெக்கானிக், வீட்டுப்பாவனை மின் உபகரணங்கள் திருத்துதல், மோட்டார் சைக்கில் திருத்துதல், கள உதவியாளர், விவசாயம், கணிய அளவை உதவியாளர், வயரிங், ஆங்கிலம் என பல்வேறு கற்கை நெறிகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
விண்ணப்பபடிவங்களை வவுனியா தொழிநுட்பக் கல்லூரி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ள முடியுமெ னவும் 25.06.2017ம் திகதிக்கு முன்னர் விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.






