வவுனியா கனகராயன்குளத்தில் நேற்று (29.05) இரவு 10.30 மணியளவில் டொல்பின் ரக வாகனம் மோதியதில் ஸ்தலத்திலேயே ஒருவர் பலியான சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
இவ்விபத்தில் பலியானவர் முள்ளியவளையையை சேர்ந்த சி.கருணேஸ்வரன் வயது 55 என அடையாளம் காணப்பட்டுள்ளார். இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது
கனகராயன்குளம் ஏ9 வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தவர் மீது பின்னால் வந்த மோட்டார் சைக்கிள் மோதியதையடுத்து நிலைதடுமாறி பிரதான வீதியில் விழுந்தவர் மீது வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி வேகமாக சென்றுகொண்டிருந்த டொல்பின் ரக வாகனம் ஏறிச்சென்றதன் காரணமாக தலைசிதறி சம்பவ இடத்திலேயே பலியானதுடன் மோட்டார் சைக்கிளில் வந்தவர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவ்விபத்து தொடர்பாக கனகராயன்குளம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.






