வடக்கு மக்கள் ஜுன் மாதம் முழுவதும் எதிர்கொள்ளப்போகும் மின்தடை!!

798

ஜுன் மாதம் 2ம் திகதி முதல் 30 ம் திகதிவரை வட மாகாணத்தில் மின்விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின்விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும்பராமரிப்பு வேலைகளுக்காக இந்த மின் விநியோகத்தடை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் குறிப்பிட்டசில நாட்களில் முற்பகல் 9 மணிமுதல் பிற்பகல் 5 மணிவரை அமுலில் இருக்கும் எனவும்இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.