பாரந்தூக்கி சரிந்து விழுந்ததில் அறுவர் உடல் நசுங்கிப் பலி!!

528

சீனாவின் ஷன்டோங் நகரில் பாரந்தூக்கி ஒன்று சரிந்து விழுந்ததில் அறுவர் கொல்லப்பட்டனர்.

ஷிஜியாங்ஸுவாங் ரயில்வே நிலைய நிர்மாண வேலைகள் நிறைவுபெறும் தறுவாயில், பாரந்தூக்கிகளை அப்புறப்படுத்துவதற்காக தொழிலாளர்கள் சிலர் அவற்றைத் தனித்தனியே பிரித்துக் கழற்றிக்கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக பாரந்தூக்கி சரிந்தது. இதில் ஐந்து தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கிப் பலியாகினர். படுகாயங்களுக்குள்ளான மற்றொருவர் வைத்தியசாலையில் சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில் உயிரிழந்தார்.

விபத்துக்கான காரணம் குறித்து பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.