இன்று முதல் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை குறையும் சாத்தியம்!!

283

நாட்டில் இன்று முதல் கடும் காற்றுடன் கூடிய பலத்த மழை பெய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறைவாக காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேல், சம்பரகமுவ, தென், மத்திய மாகாணங்களிலும், புத்தளம் மாவட்டத்திலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் எனவும் திணைக்களம’ விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும், மட்டகளப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று மாலை வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை அதிகாரி கே,சூரியகுமாரன் தெரிவித்துள்ளார்.