சவப்பெட்டி வாங்க வசதியின்றி பொலித்தீனைக் கொண்டு சடலத்தை சுற்றி அடக்கம் செய்த சோகம்!!

273

இரத்தினபுரி – களுத்துறைக்கு இடையில் அமைந்துள்ள கொலம்பெவ ஆயகம பகுதியில், சவப்பெட்டி வாங்க வசதியின்றி பொலித்தீனைக் கொண்டு சடலங்களை சுற்றி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

அண்மையில் ஏற்பட்ட மண் சரிவின் போது மண்ணில் புதையுண்டு உயிரிழந்த ஐந்து பேரின் சடலங்கள் இவ்வாறு புதைக்கப்பட்டுள்ளன.

இறுதிக் கிரியைகள் எதுவும் நடத்தப்படாது பொலித்தீனால் சடலங்கைள சுற்றி குழி தோண்டி உறவினர்கள் புதைத்துள்ளனர்.

இறுதிக் கிரியை நடத்தவோ அல்லது சவப்பெட்டி கொள்வனவு செய்து அதில் சடலங்களை வைத்து நல்லடக்கம் செய்யவோ தங்களிடம் பண வசதி கிடையாது என உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் எட்டு பேர் மண்ணில் புதையுண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதில் நான்கு சடலங்கள் முன்னதாக கண்டு மீட்டெக்கப்பட்டு சவப்பெட்டி இன்றி அடக்கம் செய்யப்பட்டுள்ளது.

பின்னர், 62 வயதான குணவதி என்பவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவரது சடலத்தையும் இறுதிக் கிரியைகளோ அல்லது சவப்பெட்டியோ இன்றி பொலித்தீனால் சுற்றி அடக்கம் செய்துள்ளனர்.