வரன் தேடும் இணையதளத்தால் சீரழிந்த இளம்பெண்ணின் வாழ்க்கை!!

555

வரன் தேடும் இணையதளம் மூலம் பழக்கமாகிய இளம்பெண்ணுடன் உறவு வைத்துவிட்டு பின்னர் கொலையும் செய்ய முயன்ற இளைஞர் கைதான சம்பவம் பெங்களூரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் 26 வயதான சுபைன் பர்மன். இவர் கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் மென்பொறியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

இந்த நிலையில் திருமண வரன் தேடும் இணையதளம் ஒன்றின் மூலம் கொல்கத்தாவை சேர்ந்த மென்பொறியாளரான 26 வயது இளம் பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இருவருமே மென்பொறியாளர்களாக இருப்பதால் வருமானத்திற்கு பிரச்சினையில்லை என நம்பிய அப்பெண்ணும், திருமணத்திற்கு சம்மதித்துள்ளார்.

இதன்பிறகு இருவரும் நேரில் சந்தித்து பழகியுள்ளனர். நாளடைவில் இருவரும் ஒரே வீட்டில் லிவ்விங் டுகெதர் வாழ்க்கை வாழ்ந்துள்ளனர். மட்டுமின்றி இருவரும் திருமணம் செய்துகொள்ளும் முடிவில் இருந்ததால் வாய்ப்பு அமைந்தபோதெல்லாம் பாலியல் உறவிலும் ஈடுபட்டு வந்துள்ளனர்.

இந்த நிலையில் திருமணம் செய்துகொள்ளும்படி அந்த பெண் வலியுறுத்தியதும், பல்வேறு காரணங்களை அடுக்கி தள்ளி வைத்தே வந்துள்ளார் சுபைன்.

இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தலையணையை வைத்து மூச்சை நிறுத்தி அந்த பெண்ணை கொலை செய்ய சுபைன் முயன்றுள்ளார்.

ஒருவழியாக அங்கிருந்து தப்பிய அந்த பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பெங்களூர், மாரத்தஹள்ளி பொலிசார் சுபைனை கைது செய்துள்ளனர்.