சென்னை சில்க்ஸ் தீ விபத்துக்கு இதுதான் காரணம்!!

273

தி.நகரில் சென்னை சில்க்ஸ் துணிக்கடை கடந்த 11 மணிநேரமாக எரிந்து கொண்டிருக்கிறது.

தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் போராடி வரும் நிலையில் கட்டிடமே இடிந்து விழும் அபாயத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவே காரணம் என தெரியவந்துள்ளது.

தீ விபத்து ஏற்பட்ட பகுதியை பார்வையிட்ட பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அளித்த பேட்டியில், தீ விபத்தால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை, தீயை அணைக்க 50 லொறிகளில் தண்ணீர் தயாராக உள்ளது என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஜெனரேட்டரில் ஏற்பட்ட மின்கசிவே இதற்கு காரணம் என தெரியவந்துள்ளது, மின்கசிவோடு அருகில் இருந்த டீசல் கேன்களும் வெடித்ததால் தீ வேகமாக பரவியதும் தெரியவந்துள்ளது.