சிறையிலிருந்து கைதிகள் தப்பியோட்டம் : சிறைச்சாலை பொறுப்பதிகாரி பணி இடைநிறுத்தம்!!

264

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து நான்கு கைதிகள் தப்பியோடிய சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை பொறுப்பதிகாரி உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் மூவர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

சிறை அதிகாரி, சார்ஜன் மற்றும் கட்டுப்பாட்டாளர் ஆகியோர் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் இடைக்கால அறிக்கையின் பிரகாரமே இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

திருட்டுச் சம்பவங்கள் சிலவற்றுடனும், கொலை சம்பவம் தொடர்பான வழக்குடனும் தொடர்புடைய நான்கு சந்தேகநபர்கள் சிறைச்சாலையில் இருந்து தப்பியோடியமை குறிப்பிடத்தக்கது.