அமெரிக்காவில் இலங்கை யுவதியின் வியக்கத்தக்க செயற்பாடு : அலைமோதும் வெளிநாட்டவர்கள்!!

458

 
இலங்கையின் கலாச்சார மற்றும் கலை அடையாளங்கள் அடங்கிய அருங்காட்சியகம் ஒன்று அமெரிக்காவில் உருவாக்கப்பட்டுள்ளது. இலங்கையை சேர்ந்த 18 வயதான ஜுலியா விஜேசிங்க என்ற யுவதியே இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

அமெரிக்காவில் பிறந்த ஜுலியா விஜேசிங்க, நியூயோர்க் நகரில் வசித்து வருகிறார். அவர் இலங்கையின் கலாச்சாரங்கள் தொடர்பில் அதிக விருப்பம் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜுலியா விஜேசிங்கவின் தந்தை நியூயோர்க் நகரில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது இலங்கை உணவக உரிமையாளராகும். அவர் கடந்த 30 வருடங்களாக அமெரிக்காவில் வாழ்ந்து வருகின்றார்.

பௌத்த கலாச்சாரம் தொடர்பில் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் பலவற்றை இந்த அருங்காட்சியகத்தில் பார்வையிட முடியும். உலகம் முழுவதும் வாழும் பலர் அருங்காட்சியகத்தை பார்வையிடுவதாக தினந்தோறும் வருகை தருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தனது பெற்றோரின் உதவியுடன் பல வருடங்களாக அருங்காட்சியகத்திற்கு தேவையான பொருட்களை ஜுலியா சேகரித்துள்ளார்.

சர்வ மத ஆசியை பெற்றுக் கொண்டு அருங்காட்சியகத்தை திறந்து வைக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.